Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
'தன்மானத்துடன் அவளுக்கென வாழ பெண்ணுக்கு இடமளிப்பீர்' என்று ஆதிக்கம் செலுத்துவோருக்கு சேதி சொல்கிறார், சகா.
“தலைகவிழ்ந்தே நாங்கள் வாழும்தோறும், தன்மானம் நொறுங்கும் ஓசை கேட்கும்” என பெண்ணுக்கு அவளுக்கென வாழவும் இடமளிப்பீர் என்று ஆதிக்கம் செலுத்துவோருக்கு சேதி சொல்கிறார், சகா.
‘மங்கையராய் பிறப்பதற்கேமாதவம் செய்திட வேண்டுமம்மா’ எனமங்கலமாய் பாடி வைத்தார் பாரதி.மண்ணிலே பிறந்திட்ட மங்கை நானோமாதவம் செய்தேனோ, அறியேன்;மனுஷியாய் மதித்தாலே போதுமென்பேன்
தாயாய், தாரமாய், தோழியாய்தமக்கை தங்கையாய் தவழும் குழந்தையாய்தாகம் பசி தூக்கம் பின்னுக்குத் தள்ளிதாழ்ந்தே சேவிக்கச் சொல்வதால்தலைகவிழ்ந்தே நாங்கள் வாழும்தோறும்தன்மானம் நொறுங்கும் ஓசை கேட்கும்
எவர் வகுத்த இலக்கணம் இதுஎங்கள் கைகளைக் கட்டிப்போட்டுஎங்கள் கனவுகளைத் தியாகிப்பது அறமெனஎவர் கற்றுத்தந்தார்?எங்கள் கனவுகள் எங்கள் விடுதலைக்கான சாவிகள்எங்கள் கனவுகள் உயிருள்ளவை; கொல்லாதீர்!
அகிம்சை வழி பெண்ணை நிகர்நிறுத்திஅவளுக்கென வாழ இடமளிப்பீர்-அன்பும் சுதந்திரமும் கிடைத்தால்அறிவும் தெளிவும் சுடர்கொளுத்திஅழலாய் மிளிர்வாள் பெண்மகளே!அடையாளம் சமைப்பாள் தனக்கெனவே!
பட ஆதாரம்: ‘நடிகையர் திலகம்’ திரைப்படம்
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address