Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
கொரோனா பெருந்தொற்று நோயின் பேரலை, இன்னும் ஓயாத நிலையில் விழிப்புடன் பாதுகாப்பாக இருந்து வருமுன் காப்பது மிகவும் அவசியம்.
டிசம்பர் 2019 இல் சீனாவில் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று நோயின் பேரலை, இன்னும் ஓயாத நிலையில் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் விழிப்புடன் பாதுகாப்பாக இருந்து வருமுன் காப்பது மிகவும் அவசியம்.
கொரோனா வைரஸ் தொற்று பெருகிக் கொண்டே இருக்கிறது. பெருகும்போதே அதன் கட்டமைப்பும் சிறிது சிறிதாக மாறிக்கொண்டே இருக்கிறது.
இந்தியாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ், மனித செல் உள்ளே எளிதாக நுழைவதற்கும் விரைவான பரவலுக்கும் ஏற்றாற்போல் திரிந்துள்ளதாக அறியப்படுகிறது. ஆப்பிரிக்க மற்றும் பிரேசில் பகுதிகளில் பரவிய வைரஸ் கிருமிகளிலும் இதே போன்ற மியூட்டேஷன் (mutation) எனப்படும் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன.
நடுத்தர வயதினர் மற்றும் குழந்தைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். ஒரு வேளை குழந்தைக்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால், குழந்தை நல மருத்துவரின் ஆலோசனைப்படி மருத்துவ உதவியோ சிகிச்சையோ தரப்படுவது அவசியம்.
பொதுவாகவே விழிப்புடன் பாதுகாப்பாக இருந்து வருமுன் காப்பது மிகவும் அவசியம்.
கையுறைகள் அணிய வேண்டும் என்று அவசியம் இல்லை; கையுறைகளை அணிந்து மேற்பரப்புகளைத் தொட நேர்ந்தால் அதன் மூலமாகவும் தொற்று பரவக்கூடும். எப்படியும் கைகளை ‘ஹேண்ட் சானிடைசர்’ அல்லது சோப் போட்டு கழுவத் தான் வேண்டும்.
வீட்டில் உள்ள பெண்களும் ஆண்களும் சமபொறுப்புடன் திட்டமிட்டு அதன் படியே பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீட்டிலிருந்த படியே உங்கள் பணிகளை நிறைவேற்றும் வசதி இருக்கும் பட்சத்தில் அதையே உங்கள் அலுவலக அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடைமுறைப் படுத்திக் கொள்ளுங்கள்.
வீட்டிலிருந்து வேலை செய்வது சாத்தியமில்லை என்றால்
இந்த சோதனையான காலகட்டத்தில், நாம் நேர்மறையான சிந்தனைகள் மற்றும் செயல்களில் ஈடுபட முயற்சிக்க வேண்டும். சுற்றி நடக்கும் விஷயங்களால் தைரியத்தை இழக்காமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும். அதே சமயம், ‘நமக்கு எதுவும் வராது’ என்கிற கண்முடித்தனமான எண்ணமும் கூடாது.
‘அவர் இங்கு சென்றார், அங்கு சென்றார், ஆனால் அவருக்கு எதுவும் ஆகவில்லை. எனவே நானும் வெளியில் சென்று மனம்போல் உல்லாசமாய் இருப்பேன்’ என்று இந்த சமயத்தில் இருந்து விடக் கூடாது.
வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. அவசியம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் மருத்துவரை ஆலோசித்து, விழிப்புடன் செயல்படுங்கள். நமது பாதுகாப்பு நமது கைகளில் தான் உள்ளது. முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டு கொரோனாவை வெல்வோம்.
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address