Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
"பெண்ணே! பழியைச் சொல்லும் பாம்புகளைப் பாங்காய் நீயும் கடந்திடடி" என்று பெண்ணின் உறுதியை, திறமையைத் தமிழால் தட்டி எழுப்புகிறார் கிருத்திகா.
“பெண்ணே! பழியைச் சொல்லும் பாம்புகளைப் பாங்காய் நீயும் கடந்திடடி” என்று பெண்ணுள் உறங்கும் உறுதியை, திறமையைத் தமிழால் தட்டி எழுப்புகிறார் கிருத்திகா.
பெண்ணே!
அனல் கொண்ட உன்விழிகள்அகிலத்தை ஆளட்டும்உடல்நோக்கும் கயவர்கள்உள்வஞ்சம் சாகட்டும்
வெற்றிகள் பலவற்றால்வேதனைகள் வேகட்டும்சாதனைப் பெண் உன்னைச்சரித்திரமும் பேசட்டும்
கிணற்றின் உள்ளே தவளையெனக்கிடந்தால் வாழ்க்கை இல்லையடிகிளர்ச்சிப் போரில் கால்பதித்தால்கீதம் வாழ்வில் இசைக்குமடி
பாலியல் சீண்டல் பலவிதத்தில்பனிமலர் உன்னை வாட்டிடுதேவேரோடு நீயும் அதைக்களைந்துவிளைச்சல் செய்திடு நல்உலகை…
பெண்ணாய்ப் பிறந்த நாள்முதலேபெரும்போர் தானடி வாழ்க்கையிலேஎதிர்த்துக் கேள்வி நீதொடுத்தால்ஏசும் பேச்சுக்கள் தொடராதே…
தங்கம் என்றும் புகழ்ந்திடுவார்தாழ்த்திப் பேசியும் இகழ்ந்திடுவார்பெண்ணே ஒன்றை நினைவில்கொள்பேசும் நாவை எதிர்த்தேநில்
பழியைச் சொல்லும் பாம்புகளைப்பாங்காய் நீயும் கடந்திடடிவிழிகள் எல்லாம் வியந்திடவேவீரம் கொண்டே நடந்திடடி
அச்சம் நாணம் மடமெல்லாம்அழகே மனதில் விதைக்காதேவீரம் வெற்றி இவைமட்டும்வேண்டும் அதைநீ மறக்காதே
காற்றைப் போல வேகம்கொள்கடமை செய்திடத் தாகம்கொள்நேற்றை நினைத்துக் கலங்காமல்நெஞ்சில் துணிவைச் சேர்த்துக்கொள்
அன்பும் அறிவும் ஆற்றலுமேஅழகடி வண்ணப் பெண்மகளேஅதைநீ வாழ்வில் உணர்ந்தாலேஅகிலம் ஆள்வாய் தூயவளே!
பட ஆதாரம்: Photo by Hassan OUAJBIR from Pexels
read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address