Are you also one of those who likes to watch video content? Watch new videos each week here!
ஏன் பெண் எழுதும்போது, அவள் பெண் என்பதை மட்டுமே முன்நிறுத்தி, அவளது எழுத்து சுதந்திரத்திற்கு அங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?
மானிடா! ஏன் பெண் எழுதும்போது, அவள் பெண் என்பதை மட்டுமே முன்நிறுத்தி, அவளது எழுத்து சுதந்திரத்திற்கு அங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?
தீராத தாகம்அதன் தாக்கம் தன்னைதூக்கம் மீது தெளித்துதுன்புறுத்தநித்தமும் நித்திரைநிந்தனைக்கு உள்ளானதுஆம்தீராத தாகம்….
இதுவும் ஒரு வித போதையேகாதல் கண்ட கண்கள்நேசம் கொண்ட நெஞ்சம்மோகம் கொண்ட தேகம்என இவை அனைத்தையும்தூக்கி எரிந்து விட்டுதீராத தாகத்துடன்நித்தமும்நித்திரையின்றிநீரில்லா நதியில்நீந்த துடித்துஏங்கி தவிக்கும்போதை இது….
மானிடா!தெரிந்துகொள்…
உன் பள்ளி பருவம்என்னுள்ளும் படர்ந்ததுண்டு…உன் தாய் மடி ஏக்கம்என் நாடிகளிலும் கலந்ததுண்டுஉன் பருவக் காதல்என் நெஞ்சிலும் மலர்ந்ததுண்டு…
உன் நடுநிசி சோகம்என் தலையணையையும் நனைத்ததுண்டு…உன் பஞ்சத்தின் போராட்டம்என் வயிற்றையும் வாட்டியதுண்டுஉன் வாழ்வின் நிதர்சனம்என் வாழ்விலும் வகுத்ததுண்டு…
புரிந்துக்கொள்…உன் வாழ்வின் நிதர்சனங்கள்அத்தனையும்என் வாழ்விலும் வகுத்ததுண்டு…
பின் ஏனடாஇவள் எழுதுகோல் பிடிக்கையில்,“இவள்”எழுதுகோல் பிடிக்கையில் மட்டும்இவளின்காதல் வர்ணனைகளையும்பஞ்சத்தின் பாடல்களையும்காமத்தின் கற்பனைகளையும்பாசத்தின் பிரதிபலிப்புகளையும்ஒரு எழுத்தாளரின் சுதந்திரம்சுடர்விடுவதாய் காணாமல் –
ஒரு பெண்ணாகவோ, மனைவியாகவோ,மருமகளாகவோ, மாமியாராகவோஅவளை மனதில் கொண்டுஅவள் எழுத்துகளைஅவள் வாழ்வோடு ஒப்பனையிட்டுஅதன் பிரதிபலிப்பெனவிமர்சனம் கொண்டுஅவள் வார்த்தைகளுக்குஅங்கேயே முட்டுக்கட்டுகிறாய்?
மானிடா…புரிந்துக்கொள்…உன் வாழ்வின் நிதர்சனங்கள்அத்தனையும்என் வாழ்விலும் வகுத்ததுண்டு…
ஆனால் உன்னில் இல்லாவார்த்தைகளின் மோகமும்வர்ணனைகளின் தாகமும்என்னுள் நான்கண்டதுண்டு….
தீராத தாகம் இது…ஆம்…தீராத தாகம் இது…ஒரு பெண், மனைவி,தாய் , மருமகள் ,ஆசிரியை எனஅத்தனையும் மறந்துவாழ்வின் நிதர்சனங்களைவர்ணனைகளால் செதுக்கும்வார்த்தைகளின் சிர்ப்பியாய்,ஒரு எழுத்தாளராய் – ஒரு எழுத்தாளராய் மட்டுமேஎன்னையும்என் வார்த்தைகளையும்இந்த உலகம் அறியுமானால்….இந்த தாகம்…தீராத இந்த தாகமும்தீர்ந்தப்பின் துயில் கொள்ளும்திருப்தியாய்!!
தலையங்கப் படம் ‘சிந்துபைரவி ‘ திரைப்படத்திலிருந்து எடுக்கப் பட்டது.
Seetha is a mother, homemaker, a wordsmith- poetry possessed & math obsessed, aiming to make a living through poetry! If you don't believe it, check out her website: www.promisingpoetry.org read more...
Women's Web is an open platform that publishes a diversity of views, individual posts do not necessarily represent the platform's views and opinions at all times.
Please enter your email address